திருவண்ணாமலை
கல்லூரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
சேத்துப்பட்டு திவ்யா குழும கல்வி நிறுவன வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டு திவ்யா குழும கல்வி நிறுவன வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளர் பா.செல்வராசன் தலைமை வகித்தார். பொருளாளர் திலகவதிசெல்வராசன், செயலர் எஸ்.செந்தில்குமார், துணைத் தலைவர் எஸ்.பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, எம்ஜிஆரின் சாதனைகள், அவர் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
விழாவில் செய்யாறு எம்எல்ஏ தூசிமோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயசுதா, அரிக்குமார், சேத்துப்பட்டு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், சேத்துப்பட்டு அதிமுக ஒன்றியச் செயலர் ராகவன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் சின்னக்குழந்தை, க.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.