குளத்தில் மூழ்கிய இலங்கை சுற்றுலா வழிகாட்டி சாவு

திருவண்ணாமலையில்குளத்தில் மூழ்கிய இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி உயிரிழந்தார்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜக் - நடலின்னா தம்பதி வந்தனர்.

திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கிய இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜக் - நடலின்னா தம்பதி வந்தனர். இலங்கை நாட்டைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி புகழ் (27) என்பவர் பிரான்ஸ் தம்பதியுடன் வந்தார். திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு பிரான்ஸ் தம்பதியும், புகழும் சென்றனர். வெள்ளிக்கிழமை மாலை கிரிவலப் பாதையில் உள்ள ஒரு குளத்தில் புகழ் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக புகழ் குளத்தில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று புகழை தேடினர். ஆனால், புகழின் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், புகழ் சனிக்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com