நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 12 பள்ளிகளைச் சேர்ந்த 1,842 மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
செய்யாறு சுகாதார மாவட்டம், நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மருத்துவ அலுவலர் இ.ஈஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இராந்தம், நாட்டேரி, துரைராஜ்நகர், பொக்கசமுத்திரம், மோரணம், பூதேரிபுல்லவாக்கம், பனைமுகை, புலிவலம் , சுனைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 12 அரசுப் பள்ளிகளில் படித்து வரும் சுமார் 1,842 மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டசோல்) வழங்கினர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர் கே.சம்பத், பகுதி சுகாதார செவிலியர் ஜி.கலைவாணி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.