திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தக் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசன வரிசையில் 2 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 1 மணி நேரமும் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.