செய்யாறு வட்டம், திரும்பூண்டி கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஆக.16) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
செய்யாறு வட்டம், பழஞ்சூர், திரும்பூண்டி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் திரும்பூண்டி கிராமத்தில் திருவண்ணாமலை தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பி.குணசேகரன் தலைமையில் புதன்கிழமை காலை நடைபெறுகிறது.
முகாமின்போது, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில், மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் இருந்து அலுவலர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.