திருவண்ணாமலைக்கு 2,650 டன் ரேஷன் அரிசி வருகை

தெலங்கானா மாநிலத்தில் இருந்து 2,650 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தது.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து 2,650 டன் ரேஷன் அரிசி ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தது.
திருவண்ணாமலை மாவட்ட நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது.
அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 2,650 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தது.
ரயிலில் இருந்து அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு, ஏராளமான லாரிகள் மூலம் திருவண்ணாமலையை அடுத்த புதுமன்னை கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com