செய்யாறில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

செய்யாறில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
செய்யாறு கௌதம் பைனான்ஸின் அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.
இந்த முகாமில் கண்புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முகாமின்போது, தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு ஐ.ஓ.எல் லென்ஸ் பொருத்துதல், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி போன்றவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com