சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

வந்தவாசி நகரில் மழையினால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசி நகரில் மழையினால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அந்த சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி, மண்டலச் செயலர் எம்.மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கிளைச் செயலர் எஸ்.நடேசன், துணைத் தலைவர்கள் பி.குலசேகரன், பி.மணி, எ.ராமமூர்த்தி, அமைப்புச் செயலர் கே.அப்துல்மஜீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அரசு 7-ஆவது ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 17-ஆம் தேதி ஓய்வூதியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மேலும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com