திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) முதல் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் - 4 தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 2018 பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான பயிற்றுவிப்பு மையம் இணைந்து தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.