உணவக உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

வந்தவாசியில் உணவக உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வந்தவாசியில் உணவக உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வந்தவாசி கே.வி.டி. நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவர், வந்தவாசி பஜார் வீதியில் உணவகம் நடத்தி வருகிறார். ஸ்ரீதர் கடந்த 2012-ஆம் ஆண்டு வந்தவாசியைச் சேர்ந்த ஜனார்த்தனன், குமார், ஏழுமலை, ஜெகன், ஜோசப் ஆகிய 5 பேரிடம் தலா ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கினாராம்.
இதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு வரை 5 பேருக்கும் மாதந்தோறும் வட்டியாக தலா ரூ.5 ஆயிரம் கொடுத்து வந்தாராம். பின்னர், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வட்டி செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. ஆனால், 5 பேரும் பணம் தரக்கோரி ஸ்ரீதரை கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி தனித்தனியாக மிரட்டினராம். இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில் 5 பேர் மீதும் கந்துவட்டி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வந்தவாசி தெற்கு 
போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com