சேத்துப்பட்டில் தூய சவேரியார் திருவிழா

சேத்தப்பட்டு லூர்து நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற சவேரியார் திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சேத்தப்பட்டு லூர்து நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற சவேரியார் திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு - போளூர் சாலையில் உள்ள லூர்து நகரில் சவேரியார் திருவிழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு தூய சவேரியார் கெபி மலர்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, தூயலூர்து அன்னை தேவாலய பங்குதந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
இதில், லூர்துநகர், நிர்மலாநகர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிருஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மெழுகுவத்தி ஏற்றியும், தூய சவேரியாரிக்கு பூமாலைகள் அணிவித்தும் பிராத்தனை செய்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
பின்னர், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவை தலைவர்கள் லூர்துநகர் நாதன்குமார், நிர்மலாநகர் பன்னீர், துணைத் தலைவர் அல்போன்ஸ் முடியப்பன், மகிமைதாஸ், காசிநாதன், சந்தோஷம்ரவி, சோபியாமேரி, ஆல்ட்ரின் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com