செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை கல்லூரி நிர்வாகமும், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்திய அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசபதி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பரிமளாஜெயந்தி வரவேற்றார்.
சிறப்பு கருத்தாளர்களாக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநர் லதா, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய உதவிப் பொறியாளர் சுபாஷ், புள்ளி விவர ஆய்வாளர் தனபால், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் ஆகியோர் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களிடையே விளக்கிக் கூறினர்.
இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.