போளூரை அடுத்த மாம்பட்டு பெரிய ஏரியில் புதன்கிழமை கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாம்பட்டு கிராமத்தில் சுமார் 110 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக பெரிய ஏரி நிரம்பி புதன்கிழமை மறுகால் பாய்ந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள், ஏரியில் பூஜை செய்து, ஆட்டுக்கிடா வெட்டி, நீரில் மலர்தூவினர்.
இதேபோல, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி நிரம்பி மறுகால் பாய்ந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.