சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா

திருவாவடுதுறை ஆதினம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதினம் சார்பில் ஆரணியில் நடைபெற்ற சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் 2016 - 2017ஆம் ஆண்டுக்கான சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி நடைபெற்றது. இதில் சித்தாந்த வகுப்புப் பேராசிரியர் மு.செல்வநாதன் பயிற்சி அளித்தார். இந்தப் பயிற்சியின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் பூபதி தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் வி.டி.எஸ்.சங்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
ஆரணி சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் டி.எஸ்.சிவகுமார் மற்றும் எம்.ராஜசேகரன், கே.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com