சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் ஏரிப் பாசனத்துக்காக கடந்த 12-ஆம் தேதி சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. அணையின் வலது, இடதுபுற கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 88 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. 24 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.