போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்மியம்பட்டு கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இயற்கை வழி சாமை சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் வடமலை தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் வல்லுநர் ஸ்ரீதரன், மலைவாழ் மக்களுக்கு இயற்கை முறையில் சாமை சாகுபடி செய்தல் மற்றும் தங்களது குடும்பத்துக்குத் தேவையான வெண்டை, கீரை, காய்கனி தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி அளித்தார்.
மேலும், உதவிப் பேராசிரியர் சரவணன் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்துகொண்டு, இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தனர். இதில், நம்பியம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.