சாலை விபத்து: விவசாயி சாவு

வந்தவாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

வந்தவாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கணேசன்(63). இவர், கடந்த புதன்கிழமை திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தெள்ளாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வளைவில் சென்றபோது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com