திருவண்ணாமலை திருக்குறள் சமுதாயம் சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, திருவள்ளுவர் சிலை பகுதியில் திருக்குறள் சமுதாயம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் தலைமை
வகித்தார்.
மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.மண்ணுலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பேச்சாளர் கு.சபரி, நூலக ஆர்வலர் அ.வாசுதேவன், பாவலர் வேலாயுதம், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.