திருவண்ணாலையில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தொடக்கி வைத்தார். இதில், எம்எல்ஏக்கள் வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தூசி கே.மோகன் (செய்யாறு), கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உள்பட பள்ளி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.