அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திருவண்ணாமலை வட்ட  அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வட்ட  அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் ஏ.பிச்சாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் ஜி.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். செயலர் எஸ்.முரளிதரன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கத்தின் புதிய தலைவராக பி.கணேசன், செயலராக ஜி.அன்பு, பொருளாளராக கே.முருகன், துணைத் தலைவராக டி.சித்தார்த்தன், இணைச் செயலர்களாக என்.சந்திரன், ஏ.ஜாகிர் உசேன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
விழாவில் மண்டலத் தலைவர் டி.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராஜசேகர், மாவட்டத் தலைவர் எம்.மண்ணுலிங்கம், மாவட்டச் செயலர் எஸ்.ராதா, மாவட்டப் பொருளாளராக பி.செந்தில்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com