இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

திருவண்ணாமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர் பிரபுதாஸ் (35). பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி புனிதா (30). இவர்களுக்கு வேஸ்லின் (8), சந்தியா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக புனிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தாராம்.
இதனால் மனமுடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை தனது சித்தப்பா வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். இதனைக் கவனித்த உறவினர்கள் புனிதாவை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com