இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டமும், இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டமும், இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன.
சிந்தனைச் சாரல் - 40 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன் தலைமை வகித்தார். முதல் நிலை நூலகர் பெ.வள்ளி முன்னிலை வகித்தார். நல் நூலகர் காமராஜ் வரவேற்றார். வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் கோ.எ.பச்சையப்பன், பேராசிரியர் சங்கர், திருக்குறள் காமராஜ், பொறியாளர்கள் சிவராமன், பராங்குசம், புதிய பார்வை அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற திருவண்ணாமலை மாணவர்கள் சந்தோஷ், முஹம்மது உவைஸ், விஷ்ணு ஆகியோர் பாராட்டி, கெளரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மருத்துவர் ஆர்.கே.துரைராஜ் சிறப்புப் பயிற்சி அளித்தார். மேலும், உலக தந்தையர் தினத்தையொட்டி, இளம் விஞ்ஞானி சந்தோஷின் தந்தை சங்கர் கெளரவிக்கப்பட்டார்.
இதில், மருத்துவர்கள் துரைராஜ், ரோஷன்லால் ஆகியோர் தலா ரூ.1,000 செலுத்தி நூலகத்தின் 1,139, 1,140-ஆவது புரவலர்களாக இணைந்தனர். நல் நூலகர்கள் வெங்கடேசன், சாயிராம், அறிவியல் ஆசிரியர்கள் ஹயாத் பாஷா, பாலசுப்ரமணியன், வழக்குரைஞர் சந்திரமோகன் மற்றும் மைய நூலக நூலகர்கள், வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com