பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை - வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி தலைமை வகித்தார். உளவியல் வல்லுநர் கே.நாராயணன் மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள், மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளை  வழங்கினார்.
மாணவர்களின் ஒழுக்கம், பண்பு, சுயக் கட்டுப்பாடு, கடமைகள், தியானம், யோகா, தேர்ச்சி இலக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 365 மாணவர்கள் பங்கேற்றனர். உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநர் செளமியா, என்எஸ்எஸ் திட்ட அலுவலர் டி.எஸ்.பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com