சர்வதேச யோகா தினத்தையொட்டி, வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு திங்கள்கிழமை யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் வந்தவாசி கிளை சார்பில், அதன் கிளை நிர்வாகி சாந்தி மாணவர்களுக்கு யோகா பயிற்சிகளை அளித்தார்.
பள்ளித் தாளாளர் டி.பன்னீர்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.