செய்யாறில் வியாழக்கிழமை மாலை தூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அக்னி வெயில் காரணமாக செய்யாறு பகுதியில் வெப்பம் அதிகரித்து வந்தது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால், செய்யாறு பகுதியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.