வந்தவாசி அருகே பைக் விபத்தில் பெண்
உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). இவர், தனது மனைவி சங்கீதா (37), மகள் அபிநயாஸ்ரீ (13), மகன் ரஜினி (9) ஆகியோருடன் பைக்கில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூருக்கு புதன்கிழமை சென்றார்.
வந்தவாசி - சேத்பட் சாலை, ஏந்தல் கூட்டுச் சாலை அருகே சென்ற போது, வேகத் தடை மீது பைக் வேகமாக ஏறி இறங்கியதில் பின்னால் அமர்ந்திருந்த சங்கீதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார். வடவணக்கம்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.