போளூர் விவசாயிகள் மகிழ்ச்சி

போளூர் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.போளூர், திருசூர், வசூர், பொத்தரை உள்ளிட்ட பல்வேறு

போளூர் பகுதியில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போளூர், திருசூர், வசூர், பொத்தரை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. தற்போது பெய்துள்ள இந்த மழையால் கால்நடைகளுக்கு அதிக அளவில் புல் கிடைக்கும். மேலும், கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com