மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் சாவு

தண்டராம்பட்டு அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

தண்டராம்பட்டு அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுந்தரேசன், சூர்யா. இருவரும் திருவண்ணாமலை ஜவுளிக் கடை ஒன்றில் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் பைக்கில் தண்டராம்பட்டுக்கு சென்றனர்.
தண்டராம்பட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுந்தரேசன் (25) இறந்தார்.
இதுகுறிதது, தண்டராம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com