152 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 152 அரசு, தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 152 அரசு, தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
483 பள்ளிகள்: திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 அரசுப் பள்ளிகள், 3 நகராட்சிப் பள்ளிகள், ஒரு வனத் துறை பள்ளி, ஒரு சமூக நலத் துறை பள்ளி, 7 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 10 நிதியுதவி பள்ளிகள், 23 பகுதி நிதியுதவி பள்ளிகள், 15 சுயநிதி பள்ளிகள், 106 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 483 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
152 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: இதில், 61 அரசுப் பள்ளிகள், ஒரு நகராட்சிப் பள்ளி, ஒரு சமூக நலத் துறைப் பள்ளி, ஒரு ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி, ஒரு நிதியுதவி பள்ளி, 6 பகுதி நிதியுதவி பள்ளி, 6 சுயநிதி பள்ளி, 75 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 152 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
32 பள்ளிகள் கூடுதல் தேர்ச்சி: 2016-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 120 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன. தற்போது கூடுதலாக 32 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்று மொத்தம் 152 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com