மாநில யோகா போட்டி: திருவண்ணாமலை அணிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொள்ளும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான யோகா போட்டியில் கலந்து கொள்ளும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் திருவண்ணாமலை மாவட்ட அணிக்கான மாணவ, மாணவிகள் தேர்வு திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தலைமை வகித்து, போட்டிகளை தொடக்கி வைத்தார். யோகா உதவிப் பேராசிரியர் சுப்பராயன் போட்டிகளை நடத்தினார். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 6,7,8,9,10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 4 மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் மாநில யோகா போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்வுப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் க.புகழேந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அ.முனியன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) பி.ராமலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com