பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளியில் தேர்வு எழுதிய 16 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மேலும், மாணவிகள் ஹேமலதா 467, அபிராமி
455 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவர் டி.பக்தவச்சலு, செயலர் ப.அருள்குமார், பொருளாளர் ஜெ.குணசேகரன் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.