திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக போளூரில் 21.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலை, போளூர், செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை பரவலாக சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. தொடர்ந்து, சனிக்கிழமை காலை வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது.
இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போளூரில் 21.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், சாத்தனூரில் 19.50 மில்லி மீட்டர் மழையும், செய்யாறில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.