தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை தொடக்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா வந்தவாசியை அடுத்த மழையூர் கோதண்டபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா வந்தவாசியை அடுத்த மழையூர் கோதண்டபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கிளைத் தலைவர் வே.குப்புசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் எ.மோகன் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் அ.நாகப்பன் புதிய கிளையைத் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் பலராமன், மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், வட்டச் செயலர் ந.இராதாகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.அரிதாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிளைப் பொருளாளர் அ.கோவர்த்தனன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com