தண்டராம்பட்டு வட்டத்தில் மே 30-ல் மருந்துக் கடைகள் அடைப்பு

தண்டராம்பட்டு வட்டத்தில் வரும் 30-ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதென மருந்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தண்டராம்பட்டு வட்டத்தில் வரும் 30-ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவதென மருந்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தண்டராம்பட்டு வட்ட மருந்து வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தண்டராம்பட்டு, பாரத் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சேட்டு தலைமை வகித்தார்.
வட்டச் செயலர் சரவணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் சண்முகம், மாவட்டப் பொருளாளர் சாந்திராஜ், ஆலோசகர் முரளி, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், இணையதள வியாபாரத்தைக் கண்டித்து வரும் 30-ஆம் தேதி மருந்துக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com