மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

திருவண்ணாமலை அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஆனானந்தல் கிராமத்தில் வெறையூர் காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வேகமாகச் சென்ற லாரி ஒன்றை போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர்.
போலீஸாரைப் பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பிச் சென்றார். போலீஸார் சென்று பார்த்தபோது, லாரியில் மணலை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com