திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் நண்பர்களுக்கு இலவசச் சீருடை, அடையாள அட்டைகள் வழங்கும் விழா
திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்டக் காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் ஜி.ஜான்கின்ஸ்லி, வழக்குரைஞர் பாபு, ஆசிரியர் சு.சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஹூபர்ட் தனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு காவல் நண்பர்கள் குழுவில் புதிதாக சேர்ந்த 130 பேருக்கு அடையாள அட்டைகள், இலவச சீருடைகளை வழங்கினார். நிகழ்வில் காவல் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ஏ.தியாகராஜ், இரா.ராஜசேகர், முதுகலை ஆசிரியர் ஏ.ஜெய்பிலிப்ஸ், கே.மல்லிகார்ஜுன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.