நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி ஊர்ப்புற நூலகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளை நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி ஊர்ப்புற நூலகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளை நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சி செயின்ட் ஆண்டனி மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அந்தப் பள்ளியின் மேலாளர் எம்.லூர்துசாமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஸ்பின் சூர்யா முன்னிலை வகித்தார். காஞ்சி ஊர்ப்புற நூலகர் என்.சுமத்ரா வரவேற்றார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 629 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நூலக வாசகர் வட்டத் தலைவர் ஏ.டி.திருநாவுக்கரசு, துணைத் தலைவர் அர்ஜுனப்பிள்ளை, பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் ஜி.பன்னீர்செல்வம், ஏ.லூர்துசாமி, எஸ்.லட்சுமி நாராயணன், வி.சரண்யா, கே.ஜெயஸ்ரீ, பி.கல்பனா, பி.வித்யாபால் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com