சேத்துப்பட்டை அடுத்த சனிக்கவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்ஏழுமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆறுமுகம் கலந்து கொண்டு, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கதை, கவிதை, பாடல், நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பட்டதாரி ஆசிரியர் விஜய்பாபு உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.