திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அழுதுகொண்டிருந்த 3 வயது சிறுவனை பொதுமக்கள் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுதுகொண்டிருந்தான். நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்த அந்தச் சிறுவனைத் தேடி யாரும் வரவில்லை.
இதைப் பார்த்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு, பேருந்து நிலையத்தில் இருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காலை 7 மணி வரை சிறுவனைத் தேடி யாரும் வராததால் திருவண்ணாமலை } பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை போலீஸார் ஒப்படைத்தனர்.
இந்தச் சிறுவனின் பெற்றோர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொ
ண்டுள்ளனர்.