டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி, வந்தவாசி நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாகச் சென்றது. வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளித் தாளாளர் டி.பன்னீர்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜோதி, நகராட்சி இளநிலை உதவியாளர் சிவா, துப்புரவு மேற்பார்வையாளர் யேசுதாஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.