வந்தவாசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திமுகவின் 15-ஆவது உள்கட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, வந்தவாசி மேற்கு ஒன்றிய திமுகவுக்கு உள்பட்ட கீழ்க்குவளைவேடு, தென்சேந்தமங்கலம், மும்முனி, புலிவாய், பாதிரி, வெண்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற முகாமில் கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி மேற்கு ஒன்றியச் செயலர் எஸ்.சுரேஷ்கமல் தலைமை வகித்தார். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார்.
திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்திரன், ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன், மாவட்டப் பிரதிநிதி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.