சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) தயாராகும் வகையில், நீட் பயிற்சியை பள்ளித் தாளாளர் பா.செல்வராசன் தொடக்கி வைத்தார்.
இதில், செயலர் செந்தில்குமார், துணைத் தலைவர் பிரவீன்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், முதன்மை நிர்வாக அலுவலர் பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் முரளி வரவேற்றார். நீட் தேர்வுக்கான பயிற்சியில் ரூட்ஸ் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் வெங்கட், கல்வி இயக்குநர் ராஜசேகர், மேலாளர் நவீன்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.