சேத்துப்பட்டு அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் நூதன முறையில் நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி சுலோச்சனா (35). இவர், சேத்துப்பட்டில் உள்ள யூனியன் வங்கிக் கிளையில் நகையை அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு, பல்லவன் வங்கிக் கிளைக்கு மொபெட்டில் சென்றார்.
இவரை கண்காணித்த மர்ம நபர்கள், பல்லவன் வங்கிக் கிளைக்கு வெளியே பணத்தை கீழே போட்டு இது உங்கள் பணமா என்று கேட்டுள்ளனர். அப்போது, கீழே கிடந்த பணத்தை எடுக்க சுலோச்சனா குனிந்த நிலையில், அவரது மொபெட்டில் இருந்த ரூ.90
ஆயிரம் மற்றும் ஒரு பவுன் நகையை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.