செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் கிராமக் காலனியில் புதிய நியாய விலைக் கடையை தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
செய்யாறு ஒன்றியம், சிறுங்கட்டூர் கிராம காலனிப் பகுதியில் உள்ள 400 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை எம்எல்ஏ தூசி கே.மோகன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பொது விநியோக துணை பதிவாளர் மோகன், கூட்டுறவு சார் - பதிவாளர்கள் எட்டியப்பன், ரமேஷ்பாபு, அதிமுக மாணவரணி எம்.மகேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் எஸ்.திருமூலன், அவைத் தலைவர்கள் டி.பி.துரை, எஸ்.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.