கண் தான விழிப்புணர்வு நடை பயணம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு நடை பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் தான விழிப்புணர்வு நடை பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு, கல்லூரியின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, 104 மருத்துவ சேவை சார்பில் இந்த நடை பயணம் நடத்தப்பட்டது. மருத்துவக் கல்லூரி முதல்வர் நடராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஷகில் அஹமது, குடியிருப்பு மருத்துவ அலுவலர் ஸ்ரீதர், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் குப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள், தங்களது கண்களை கட்டிக்கொண்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டனர்.
இதில், நலப்பணிகள் இணை இயக்குநர் பாண்டியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com