திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணிபுரிய சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் கங்ஞ்ஹப்-ஸ்ரீன்ம் டழ்ர்க்ஷஹற்ண்ர்ய் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் என்ற பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் எல்.எல்.பி. அல்லது பி.எல். முடித்து 40 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பின் 62 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான சட்ட ரீதியான பணியில் ஓர் ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும். தகுதினோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், பெரியார் சிலை, திருவண்ணாமலை - 606601 என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04175-223030 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.