தண்டராம்பட்டு அருகே தொடர் மழையால் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
தண்டராம்பட்டை அடுத்த வீராணம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் பழுதடைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், வீராணம் கிராமத்தில் பெய்து வந்த தொடர் மழையால் மேலும் பழுதடைந்த பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.