மரத்தில் கார் மோதல்: தந்தை, மகள் பலி

திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். தாய், மற்றொரு மகள் பலத்த காயமடைந்தனர்.

திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். தாய், மற்றொரு மகள் பலத்த காயமடைந்தனர்.
கும்பகோணம், அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (38). இவரது மனைவி ராணி (34). மகள்கள் சாருண்யா (7), காருண்யா (7). சிறுமிகள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில், போளூரில் உள்ள உறவினர் வீட்டில் தீபாவளி கொண்டாடுவதற்காக ஜெயச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை காரில் சென்று கொண்டிருந்தார். திருவண்ணாமலையை அடுத்த காரியந்தல் வனப் பகுதி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 குரங்குகள் சென்றனவாம். காரை ஓட்டி வந்த ஜெயச்சந்திரன், குரங்குகள் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரின் இடிபாடுகளில் சிக்கிய ஜெயச்சந்திரன், காருண்யா ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ராணி, சாருண்யா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com