பைக் திருட்டு: இளைஞர் கைது

செங்கத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

செங்கத்தில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
செங்கம் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரிடம் பைக்குக்கான எந்த ஆவணமும் இல்லாததுடன், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், போலீஸார் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் அந்த இளைஞரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ராமன்  என்பதும், பைக்கை அவர் திருடி வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக ராமனிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com