தலைக்கவசம் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு: காவல் துறையினர் வழங்கினர்

ஆரணியில் தலைக்கவசம் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை சார்பில் சனிக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது

ஆரணியில் தலைக்கவசம் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை சார்பில் சனிக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.
ஆரணியில் காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு ஆய்வாளர் விநாயகமூர்த்தி இனிப்பு வழங்கினார். மேலும், காரில் பாதுகாப்பு பெல்ட் அணிந்து சென்றவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல, தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளர் ஜமீஸ்ராஜா, போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com